Halal Ads

Tuesday 26 March 2013

உயிர்களிடத்தில் அன்பு !

                                     ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார்.

உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி - 2363.

தித்திக்கும் மாம்பழத்தின் நன்மைகள்!!!

                                              கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா? பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது. சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்.

1 - புற்றுநோய் மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

2 - கண்கள் மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

3 - கொலஸ்ட்ரால் மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

4 - நீரிழிவு மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

5 - முகப்பரு மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

6 - பாலுணர்வு பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

7 - நோய் எதிர்ப்பு சக்தி மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

8 - ஆரோக்கிய இதயம் மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

Saturday 23 March 2013

I PROUD FOR I AM MUSLIM

                        இதைக் கேட்டால் நான் முஸ்லிம் என்று சொல்லி பெருமைபடுவீர்கள் .....











திருந்துங்கள் ! திருத்துங்கள்


Thursday 21 March 2013

நான் ஏன் நூடுல்ஸ் சாப்பிடமாட்டேன் தெரியுமா?


 

 
            கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன
.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.

இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

குப்பையில் போடுங்கள்
ஒரு பாக்கெட் 10 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

ஆதாரத்தோடு நிரூபணம்
விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் ‘இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

என்ன சத்துக்கள் இருக்கு?
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது.

உடலுக்கு கெடுதல்தான் வரும்
குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன நிறுவனங்கள். ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

குறைவான சத்துக்கள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியவை நூடுல்ஸ்சில் மிக மிக குறைந்த அளவிற்கே உள்ளன.

அதிக உப்பு இருக்கு
ஆனால் எல்லா பிராண்ட் நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.
நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவுதான் இருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது.

அதிக கொழுப்பு இருக்கு
இந்த நூடுல்ஸ் உணவில் கொழுப்பும் மிகுதியாக உள்ளது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

அலட்சியம் காட்டும் நிறுவனங்கள்
இந்த நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனவே தவிர வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளைந்த மண் விலை நிலமாக மாறிய காரணத்தால் குப்பைகளை கூட உணவுகளாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றன நிறுவனங்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.

கடிதம் அனுப்பிய ஆய்வாளர்கள்
இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியும் அதை அலட்சியம் செய்துவிட்டன அந்த நிறுவனங்கள். இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.

விஷத்தை உணவாகக் கொடுக்கிறோம்
எந்தவித சத்துமே இல்லை என்று ஆய்வாளர்கள் கத்தி கதறினாலும் விளம்பரங்கள் மூலம் அவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன நிறுவனங்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர் வருங்கால இந்திய சமுதாயத்தினர்.

நிரந்தர நோயாளிகளாக...
மசாலா கலந்த இந்த நூடுல்ஸ் வெறும் குப்பைதான் என்பதை ஒவ்வொரு இந்தியத் தாயும் உணரவேண்டும். இல்லை எனில் நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக மாற நாமே காரணம் ஆகிவிடுவோம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதனால்தான் என்னோட குழந்தைகளுக்கு நான் நூடுல்ஸ் தர்றதில்லை. அதோட ருசியையும் பழக்கினதில்லை. உங்க வீட்ல எப்படி?
 
Source - Thatstamil 

பாலியல் கொடுமை - தீர்வு இஸ்லாம்



               பிரிட்டன் நாகரிகத்தின் (?) சிகரத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. தலைநகர் லண்டன் உலக நாகரிகங்களின் தொட்டில் என்று பெருமை பேசுவர். அறிவியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடு என்பர். படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் சிறந்த இடம் என்றும் அதேநேரத்தில்,சுதந்திரம்பெண் விடுதலைஜனநாயகம்கருத்துரிமை போன்ற நவீனங்களின் வளர்ப்பு தேசம் என்றும் மெச்சுவர். சூரியன் அஸ்தமிக்காத நிலப்பரப்பு என்றும் போற்றுவர்.

அந்த நாட்டில்தான் இப்போது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரக் கொடுமைகள் எல்லை தாண்டிநாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மர்மக் கொள்ளை நோய்’ என்று நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வர்ணிக்கின்ற அளவுக்குகற்பழிப்பு சம்பவங்களும் பாலின அத்துமீறல்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. நாடே கலாசார முடைநாற்றத்தால் மூச்சடைத்துப் போயிருக்கிறது.

2013 ஜனவரியில் வெளியான அரசாங்கத்தின் அறிக்கை இந்தக் கொள்ளை நோயை’ வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. பிரிட்டனில் 20 பெண்களில் ஒருத்தி அறுபது வயதுக்குள் கற்பழிக்கப்படுகிறாள்அல்லது அபாயகரமான பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்கிறது அரசு அறிக்கை.

பிரிட்டனின் சட்ட அமைச்சகம்உள்துறை அமைச்சகம்தேசிய புள்ளிவிவர மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் இந்த அறிக்கை ஏராளமான ஏடுகளில் வெளியாகியிருக்கிறது. டைம்ஸ்’ பத்திரிகைஇந்தக் கற்பழிப்புகளை மர்மக் கொள்ளை நோய்’ என்றே வர்ணித்துள்ளது.

ஆண்டு தோறும் 5 லட்சம்


ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாலின அத்துமீறல் சம்பவங்கள் -அதன் எல்லா வகைகளையும் சேர்த்தால்- 5 லட்சத்தை எட்டுகின்றன. காரணங்கள் என்ன?விளைவுகள் யாவைதீர்வு என்னதெரிந்துகொள்ள வேண்டாமா?

அறிக்கையை வாசிக்கும் யாருக்கும் முதலில் ஆச்சரியம்தான் ஏற்படும். உறுதிவாய்ந்த சட்டம்தனிமனித மற்றும் பாலினச் சுதந்திரம் ஆகியவை எல்லாம் நெடுந்தூரத்திற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிற ஒரு புதுமை பூமியில் இந்தக் கொடுமைகளா?

ஆம்! பிரிட்டனின் மறுபக்கத்தைப் பார்த்தால் இக்கொடுமைகள் இயல்பானவைதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பாலின நட்புகாதல்விபசாரம்ஒருபால் உறவு இவை எல்லாம் பரஸ்பர இசைவில் நடந்தால் 16 வயது முதல் அனுமதிக்கப்படும் என்கிறது பிரிட்டிஷ் சட்டம். இந்தப் பைத்தியக்கார சுதந்திரம்தான் வயது வித்தியாசமின்றியும் இசைவின்றியும் நடக்கிற பாலியல் கொடுமைகளுக்கும் அடிகோலுகின்றன.

பாலின இச்சையின் வாயில் திறக்கப்பட்டால்அது எல்லையைத் தாண்டும் என்பதற்கு இது அடையாளமல்லவாஇதை அனுமதிக்கும் எந்தச் சமூகமானாலும் அது எல்லா மட்டங்களிலும் சிக்கல்களைச் சந்திக்கும் என்பதற்கு இது ஆதாரமல்லவாசெயற்கைச் சட்டங்கள் -மனிதன் வகுக்கும் விதிகள்- மனித குலத்தைக் காக்கத் தவறிவிட்டனமார்க்கத்தையும் மனத்தையும் அரங்கிலிருந்து ஒதுக்கிவிட்டன என்பதற்குச் சிறந்த சான்றல்லவா?

இணையதளத்தில்பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் பக்க்ததில் அநத் அறிக்கை விரிவாக வெளிவந்துள்ளது. இங்கிலாந்திலும் வேல்ஸிலும் நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பான மீள்பார்வை’ என்பது தலைப்பு. இதுதான் இவ்வகையில் வெளியான முதல் அறிக்கையும்கூட.

அறிக்கை விவரம்


பிரிட்டனில் ஆண்டுதோறும் 95 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்;அல்லது ஆபத்தான வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

உண்மையில் அங்கு பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் 50லட்சம் இருக்கும். வழக்கில் சிக்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றிலும் 87 ஆயிரம் குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றம் செல்கின்றன. ஆனால்வெறும் ஆயிரம் குற்றச் சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களில் 90 விழுக்காட்டினருக்குக் குற்றவாளி யார் என்பது தெரியும். ஆனால், 15 விழுக்காடு பெண்களே காவல்துறைக்குத் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மானம்;குடும்பத்தைப் பாதிக்கும் என்ற பயம்.

காவல்துறை இந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லைஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சட்டமும் தனது இயல்பான போக்கில் இல்லைபாதிக்கப்படும் பெண்களின் பரிதாப நிலைகளைக் கண்டுகொள்வதில்லைஉரிமைக்கு மதிப்பளிப்பதில்லை.

பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்குத் திரைப்படங்கள்,விளம்பரங்கள்கிளப்கள்இரவு விடுதிகள்போதைப் பொருட்கள்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ஆபாச இதழ்கள்இணையதள பக்கங்கள் ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.

உளவியல் நிபுணர்கள் கூறும் காரணங்களையும் பார்ப்போம்: கோபக் கற்பழிப்புஎன்று ஒன்று உண்டு. தன் கோபத்தைக் கற்பழிப்பு மூலம் ஒருவன் வெளிப்படுத்துகிறான். அதில் உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறான்.ஆற்றல் கற்பழிப்பு’ என்ற வகையும் உண்டு. இதில் ஈடுபடுபவன்தான் ஒரு பலசாலி என்பதைக் காட்ட விரும்புகிறான். அடுத்த இனத்தின்மீது அதிகாரம் செலுத்த விரும்புகின்றவனும் கற்பழிப்பில் ஈடுபடுகிறான்.

மனநோய்சமூகத்தின் அன்பு கிடைக்காமைபெண்கள் தரம் குறைந்தவர்கள் என்ற தவறான கருத்துநண்பர்களின் தூண்டல்நண்பர்களிடம் ஹீரோவாகக் காட்டிக்கொள்ளல்பாலியல் வன்முறைக்கு இவனே முன்பு இலக்கானது இப்படி பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.

தீர்வு என்ன?


இஸ்லாமியப் பண்பாடுகளும் விதிகளுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். இந்நிகழ்ச்சிகள் தினமும் இதையே நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

கற்பொழுக்கமுள்ள நல்ல முஸ்லிம் பெண்மணி தன்னைத் தவறான எண்ணத்தோடு பார்க்கும் ஒருவனை அந்நியவனாகக் கருதி ஒதுங்கிவிடுவாளே தவிர அவனுடன் சகவாசம் வைத்துக்கொள்ளமாட்டாள்.

வரலாற்றில் ஒரு நிகழ்வு உண்டு: பனூ நுமைர்’ குலத்தாரில் ஒரு குழுவைக் கடந்து அரபுப் பெண்மணி ஒருவர் சென்றார். அப்பெண்ணை அவர்கள் குறுகுறுவெனப் பார்க்கத் தொடங்கினர்பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.

அப்போது அப்பெண்மணி கூறினார்: பனூ நுமைர் குலத்தாரே! நீங்கள் இரு அறிவுரைகளில் ஒன்றைக்கூட எடுத்துக்கொள்ளவில்லையே!

‘‘இறைநம்பிக்கையாளர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்’’ (24:30)

என்ற இறைவாக்கையும் நீங்கள் மதிக்கவில்லை.



விபசாரம் மற்றும் கற்பழிப்புக்கு இட்டுச்செல்லும் பாதைகளை இஸ்லாம் அடைத்துவிட்டதுமன இச்சைகளைத் தூண்டி ஆணையோ பெண்ணையோ சபலப்படுத்தும் வழிகளை மூடிவிட்டதுஅத்தகைய செயல்களுக்குத் தடை விதித்துள்ளது.

அந்நியனுடன் ஒரு பெண் தனிமையில் இருப்பதுஒருவரை ஒருவர் இச்சையுடன் நோக்குவதுஒருவரின் மறைக்க வேண்டிய உறுப்புகளை மற்றவர் பார்ப்பது ஆகிய அனைத்துக்கும் மார்க்கம் தடை விதித்துள்ளது. அவ்வாறேபெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வதுபெண்ணை ஒரு நுகர்பொருளாகக் காட்டும் ஆடை ஆபரணங்கள் அணிந்து காட்சியளிப்பதுஆண்-பெண்ணுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காது.

இந்தப் பூமியை நிர்மாணித்துஅதில் தன் பிரதிநிதியாகச் செயல்படவே மனிதனை இறைவன் படைத்தான். பூமியின்கண் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமானால்,மனித இனம் இருந்தாக வேண்டும். இது தொடர்வதற்காகவே மனிதனில் சில இயற்கைத் தேவைகளையும் இயல்பான வேட்கைகளையும் அவன் அமைத்திருக்கின்றான். பாலியல் உணர்வு என்பது அத்தகைய வலுவானஒதுக்க இயலாத இயல்புகளில் ஒன்றாகும்.

பாலியல் உணர்வுகளையும் இன ஆசைகளையும் பொறுத்தமட்டில் மனிதன் மூன்று வகையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றான் எனலாம்.

1. அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்போல் கண்போன போக்கில் இச்சைகளைத் தீர்க்க நினைப்பான். வரையறைசமயம்பண்பாடுசமூகக் கட்டுப்பாடு போன்ற எந்தக் கடிவாளத்தையும் ஏற்கமாட்டான். கடவுள் மறுப்புக் கொள்கைவாதிகளின் நிலை இதுதான்.

2. இயற்கையான அந்த ஆசைகளை அடக்குகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு துறவறத்தை மேற்கொள்ளல். இது இயற்கையைப் புதைத்து அதன் செயல்பாட்டைச் சாகடிப்பதாகும்.

3. இந்த ஆசைகளுக்கு வரையறை வகுத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்து அனுபவிப்பது. இந்த நடுநிலைப் போக்குதான் இறைமார்க்கம் சொல்லித்தரும் வழியாகும். அது விபசாரத்திற்கு தடை விதிக்கிறது;விவாகத்தை அனுமதிக்கிறது. குறிப்பாக இஸ்லாம்பாலியல் உணர்வை ஒப்புக்கொண்டுஅதற்கு வடிகாலாகத் திருமணத்தைக் காட்டி,துறவறத்திற்குத் தடையும் விதித்துள்ளது. அதே நேரத்தில்வரம்புமீறி விபசாரம் போன்றவற்றில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறது.

இதுவே நடுநாயகமான நிலையாகும். திருமண முறை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனித இனப்ªருக்கம் நின்றுபோய்விடும்அதேநேரத்தில்,விபசாரத்திற்கும் தவறான பாலுறவுகளுக்கும் தடை இல்லாதிருந்தால்குடும்பக் கட்டமைப்பு சிதறிவிடும். குடும்பம் இல்லையேல் சமூக அமைப்பும் இருக்காது. முன்னேற்றமோ வளர்ச்சியோ காணப்படாது.

எனவேபிரிட்டளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும்பெண்களுக்கெதிரான வன்முறைகளை பிரிட்டனில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தடுக்காவிட்டால் மனிதகுலத்திற்குப் பேரழிவுதான்! இஸ்லாம்தான் அதற்கு ஒரே மருந்து.

நன்றி: அல்முஜ்தமா அரபி வார இதழ்

1- Hidden rape epidemic is revealed by crime survey
2- The Times 11 January 2013
3- An Overview of Sexual Offending in England and Wales
4- Home office: 10 January 2013 5- http://www.homeoffice
 
gov.uk/publications/scienceresearch-statistics/researchstatistics/crime-research/mojove
 
view=Standard&pubID=1؟/rview.146199
 

Wednesday 20 March 2013

பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்!



குர்ஆன் கூறும் விஞ்ஞானம். இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்!  உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' என்றும் நாம் கூறினோம்.
அல்குர்ஆன் 2:36

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!
அல்குர்ஆன் 7:10

                            பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5,80,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.

முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து, இக்கோளின் பகல் நேர வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும், இரவு நேர வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.

அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.

வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10,08,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இரவிலும் பகலிலும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் 11 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.

மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலைவிலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.

ஜூபிடர் எனும் வியாழன் கோள், சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும், நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும், புளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும், இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.

சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.

சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும், அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை "வாழ்வது' என்று கூறக் கூடாது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு "இதில் தான் வாழ்வீர்கள்'' என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்?
எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
இன்ஷா அல்லாஹ் 
இஸ்லாம் கூறும் விஞ்ஞானம் வளரும்

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?


 கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
இதோ பட்டியல்

         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

        
சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

        
ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

        
மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

       
மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
  
      
காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

      
கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

       
கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

      
சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

      
நெய்யில் மசித்த உருளக்கிழங்குவனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

       
வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

       
ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்

       
பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

       
பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.         பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம்        பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

       
தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்

       
சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

      
குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

      
ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

      
நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

      
தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்

     "
கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

       
இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

      
சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

       
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்

        
கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்
.
      
ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

    
முட்டை யில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.

   
மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம்
     
விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.






நன்றி :-


http://sathik-ali.blogspot.in